Wednesday, October 12, 2011

இப்பொழுதின் இத்-தனம்
அப்பொழுதின் அத்-தனத்தைப் போலவே
இருப்பதாகத் தோன்றிற்று. அத்தனை 
சிந்திப்பில் இப்பொழுது நழுவி 
அப்பொழுதாயிற்று. இத்தனை 
வேகமாய் விடைபெற்ற அப்பொழுதும் 
இப்பொழுது அதன் அத்-தனத்தைக் 
கைவிட்டு விலகிற்று
நினைவின் மெத்தனத்தில். 

No comments: